உலகம் 2012ம் வருடம் டிசம்பர் 21ம் தேதி அழியும் என்று சொல்கின்றார்களே. அப்படியா?





விஞ்ஞானம்: நாம் வசிக்கும் விண்மீன்திரளுக்கு (Galaxy) பால்வழி-விண்மீன்திரள் (Milky-way Galaxy) என்று பெயர். விண்மீன்திரள் என்பது பல கோடானகோடி விண்மீன்களைக் கொண்டதாகும். இதில் நமது சூரியனும் ஒரு விண்மீன். இந்தச் சூரியன் என்னும் விண்மீனைத்தான் பூமி உட்பட 10 கோள்கள் சுற்றிவருகின்றன. நமது சூரியக்குடும்பம் இந்த விண்மீன் திரளின் பெரிய வட்டத்தில் சுற்றுகின்றது. அதை ஒருதடவை சுற்றிவர 220-225 மில்லியன் வருடங்களாகும். இதில் ஒரு விண்மீன்திரள் நாள் என்பது 25,625 வருடங்களாகும். இதை ஐந்து 5125 சுழற்சியாக பிரிக்கப்பட்டுள்ளது. (One galactic day of 25,625 years is divided into five cycles of 5,125 years). இந்த அண்டம் (Universe - billions of galaxies) எவ்வளவு பெரியது என்று நீங்களே பாருங்கள்.


மாயன் காலண்டர்
: இது மெக்ஸிகோ வளைகுடா பகுதி (வட மற்றும் தென்அமெரிக்காவுக்கு இடைப்பட்ட பகுதி) யில் வசிக்கும்
ஆதிவாசிகளினால் எழுதப்பட்ட ஒரு காலண்டர். எப்படி தமிழ் வருடங்கள் 60 வருடங்களைக் கொண்டுள்ளதோ, அதேபோல் இந்த மாயன் ஆதிவாசிகளுக்கு 5125 வருடங்களாகும். இதில் 4 முறை 5125 வருடங்கள் வந்துவிட்டதாம், கடைசியான 5125ம் வருடம் டிசம்பர் 21, 2012ல் முடிந்துவிடுமாம். அதன் பின் அவர்களுக்கு வருடங்கள்/காலண்டர் இல்லை என்று சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு 5125 வருடங்கள் முடியும்போதும் பூமியில் பேரழிவுகள் வருமாம். இந்த தடவை தங்களுடைய காலண்டரே முடியப்போவதால் பூமியே அழியும் என்று மிகப்பெரிய அளவில் பேச்சு நிலவுகின்றது. சிலர் புது ஆரம்பம் இருக்கும் என்று சொல்கின்றனர். அவர்கள் இதற்கு முன் கணித்துக்கூறிய பல சம்பவங்கள் நிறைவேறியிருக்கின்றனவாம்.
விஞ்ஞானம்: சூரியன் இந்த விண்மீன் திரளின் மையத்துடன் நேர்க்கோட்டில் 5125 வருடங்களுக்கு ஒருமுறை வருமாம். வரும் டிசம்பர் 21, 2012ல் விஞ்ஞானிகளின் கணக்கும் மாயன்களின் கணக்கும் ஒத்துப்போவதால் எல்லாரும் இப்போது மாயன் காலண்டரை ஆராய்ச்சி செய்கின்றார்கள். அந்த காலண்டர் துல்லியமானது என்று சொல்லப்படுகின்றது. அன்று சூரியன் பால்வழி விண்மீன் திரள் மையத்தோடு நேர்கோட்டில் வந்தால் விஞ்ஞானப்படி அந்த மையத்தில் ஈர்ப்பு மிக மிக அதிமாயிருப்பதால், பூமியின் அச்சில் ஆட்டம் கண்டு அது மாறக்கூடும், துருவங்கள் நகரக்கூடும், காந்த அலைகள் மாறும், பூமியின் சுற்றும் திசையில்கூட மாற்றம் வரலாம் என்று விஞ்ஞானிகளே சொல்லுகிறார்கள். அப்படி குலுங்கும்போது பூமியதிர்ச்சிகளும், கடல் நீர் உள்ளே புகுதலும், துருவங்களிலுள்ள பனிக்கட்டிகளின் இடமாற்றமும் நடைபெறும், அப்பொழுது தீவுகளும், எந்த நாடு வேண்டுமானலும் இல்லாமல் போகுமாம்.
...ஆனால் NASA-விலிருந்து விஞ்ஞானி ஒருவர் பூமி ஒவ்வொரு குளிர்காலத்திலும் விண்மீன் திரள் மையத்தோடு நேர்க்கோட்டில் வருகின்றது, இது ஒன்றும் புதிதல்ல, ஒன்றும் சம்பவிக்காது. விண்வெளிக் கற்கள் எதுவும் பூமியைத்தாக்கும் என்றால் அவைகள் நம்முடைய தொலைநோக்கிகளுக்கும், கண்களுக்கும் தெரியும் தொலைவில் இருக்கும், அப்படி எதுவும் இல்லை என்று உறுதியுடன் சொல்கின்றார்.


இப்படி ஒரு செய்தி ஜனங்களிடையே பரவுகின்றது. பைபிள் என்ன சொல்கின்றது?
2012ல் உலகம் அழியும் என்று சொல்லப்படவில்லை. இன்னும் குறைந்தது 1000ம் வருங்களுக்கு பூமி அழியாது. ஏனெனில் பூமியில் 1000 வருட ஆளுகை இருக்கும் என்று வேதம் சொல்லுகின்றதே!
ஆனால், பூமியதிர்ச்சிகளும், யுத்தங்களும் பூமி உண்டானதுமுதல் இல்லாத அளவுக்கு வரும் என்று இயேசு ஏற்கனவே சொல்லிவிட்டுப்போனார். ஆனால் அது உபத்திரவகாலத்தில் காணப்படும். அதற்கு முன் இரகசிய வருகை இருக்கும். உபத்திரவகாலத்தில் வானத்திலிருந்து பூமியில் விழும் நட்சத்திரங்களைக்குறித்தும் பூமியில் அதினால் உண்டாகும் சேதங்களைக்குறித்தும் இன்னும் அநேக சேதங்கள், ஆபத்துகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகமானது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரால் மீண்டும் அழியாது.

இரகசிய வருகை எப்போது இருக்கும்? அதான் இரகசியம்-னு சொல்லியாச்சே.
மத்தேயு 24:36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

Comments